சென்னை விருகம்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் புரட்சி பாரதம் கட்சியினருக்கும் இடையே மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில், வி.சி.க நிர்வாகி ஆதவன் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தப்போது புரட்சிப் பாரதம் கட்சி பேனர் மீது மோதியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த புரட்சி பாரதம் கட்சியினர், ஆதவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் ஆட்களை அழைத்து வந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மோதலில் வி.சி.க தரப்பில் 3 பெண்களுக்கும், புரட்சி பாரதம் தரப்பில் 4 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருதரப்பும் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வி.சி.க – புரட்சி பாரதம் கட்சியினர் மோதலால் தலைநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
சீரியல் நடிகை விபத்தில் பலி.. துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட காதலன்..!
காதல் மனைவி விவகாரத்து.. மாமனாரை கொலை செய்த மருமகன்..!
கனமழை இடிந்து விழுந்த வீட்டின் ஸ்லாப்..பறிபோன சிறுமியின் உயிர்..!
மாநகர பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் தகவல் பலகைகள்..!
எடப்பாடி அருகே கல்லூரி மாணவி மீது சரக்கு வாகனம் மோதி விபத்து..!
சினிமாவில் நடக்கும் அந்த மாதிரி விஷயங்களை தவிர்க்க வேண்டும்.. நடிகை நிகிலா..!