தேர்வுக்கு பயந்து பள்ளி மாணவனை வீட்டில் வந்து கூட்டி சென்ற பெண் போலீஸ்..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேர்வுக்கு பயந்து பள்ளிக்கு வராத பழங்குடியின மாணவர்களிடம் இரு பெண் போலீசார் அன்பாக பேசி பள்ளிக்கு அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

காபி காடு என்னும் இடத்தில் உள்ள மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் புளியம்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் தேர்வு நடைபெற இருந்த நிலையில் 7 மாணவர்கள் பள்ளிக்கு வராதது தெரிய வந்தது.

 

அதையடுத்து பள்ளி சார்பாக அளித்த தகவலின் பெயரில் கூடலூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உஷா மற்றும் பெண் காவலர் அழகரசி ஆகியோர் தேர்வுக்கு பயந்து தங்களது கிராமத்தில் ஒளிந்து கொண்ட மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு அழைத்து சென்றனர்.