குண்டி எறிதலில் அசத்திய கிரண் பலியான்.. பிரதமர் வாழ்த்து!
குண்டு எறிதலில் வெண்கலம் வென்ற கிரண் பலியானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ள பிரதமர் மோடி ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் வீராங்கனைகள் தொடர்ந்து சாதனை படைத்து வருவதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
வெண்கலம் வென்று தனித்துவமான சாதனையை பதிவு செய்திருக்கும் கிரண் மிகப்பெரிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி அவரது வெற்றியால் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆசிய போட்டியில் குண்டு எரிதல் போட்டியில் பங்கேற்ற கிரண் பலியான் தனது மூன்றாவது முயற்சியில் வெண்கல பதக்கம் வென்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





