அடுத்து 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு..!
நீலகிரி, கோவை, தேனி உட்பட ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கு மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





