தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து துடிதுடித்து பலியான ஒன்றரை வயது குழந்தை..!
திருப்பத்தூர் மாவட்டத்தில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கோபி சுமித்ரா தம்பதியினரின் மூன்றாவது குழந்தை கௌஷிக். வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளான்.
குழந்தையை தேடிய போது தண்ணீர் தொட்டியில் இறந்து கிடப்பது தெரிய வந்தது. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





