தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் பிளஸ் டூ தேர்வுகள் ஆரம்பம்..!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வு இன்று காலை தொடங்குகிறது. இதை ஒட்டி மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 185 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 8 லட்சத்து 51 ஆயிரத்து 33 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர்.
மாணவ, மாணவியர் எந்தவித சிரமும் என்று தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கைகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல் புதுவையிலும் இன்று தொடங்கும் 12ம் வகுப்பு தேர்வை 14 ஆயிரத்து 670 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். அங்கு சுமார் 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





