ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது பெண் குழந்தை..!
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது பெண் குழந்தையை மீட்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சர்தார் மாவட்டத்தில் கிராமத்தை சேர்ந்த குழந்தை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது மூடப்படாமல் கிடந்த ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். 30 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஆழ்துளை கிணறு அருகே குழி தோண்டி குழந்தையை பத்திரமாக மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் பணியாளர் தெரிவிக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





