ஊசி போட்டுவிட்டு வீடு திரும்பிய முதியவர் உயிரிழப்பு..!
பண்ருட்டி அருகே மருந்தகத்தில் ஊசி போட்டுக் கொண்டு வீடு திரும்பிய முதியவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மருந்தகத்தில் ஊசி போட்டுக் கொண்ட கடலூர் மாவட்டத்தில் சிறுபத்துரைச் சேர்ந்த முதியவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கம்போல் ஊசி போட்டுக் கொண்டு வீடு திரும்பிய முதியவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் முதியவர் உயிரிழந்தது குறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





