தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் விலங்கியல் துறை ஆசிரியராக பணியாற்றி வரும் அழகர் என்பவர் மாணவி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பெற்றோர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் செய்திகள் :
எலக்ட்ரிக் பைக்கில் வந்த முதியவருக்கு நேர்ந்த சோகம்..!
மின்னல் வேகத்தில் வந்த பைக்.. நடந்த பயங்கரம்..!
50 கிலோ கெட்டுப்போன திண்பண்டத்தை அழித்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள்..!
திமுக வேட்பாளர் பெயரை கொண்டவர் சுயேட்சையாக போட்டி..!
பல இடங்களில் கத்தி குத்து..ரத்த வெள்ளத்தில் மனைவி..!
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 1403 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல்..!