கணவனுக்கே தெரியாமல் மனைவி செய்த காரியம்..!

ன்னியாகுமரியில் கடன் தொல்லையால் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குலசேகரம் அருகே சூரிய கோடு பகுதியை சேர்ந்த ஜான்சன் சந்தியா தம்பதியருக்கு குழந்தை வரம் இல்லை என்று கூறப்படுகிறது.

 

என்னுடைய கணவருக்கு தெரியாமல் சந்தியா வேறு நபரை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 30 லட்சம் ரூபாய் வரை கடனாகப் பெற்று உள்ளார். கடனை வசூலிக்க சந்தியாவின் வீட்டிற்கு தனது தாயுடன் வந்தவர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

 

இதன் பின்னர் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. சந்தியாவின் தொலைபேசி எண்ணை தொடர்ந்து முயற்சித்தபோது தொடர்பு கொள்ள முடியாததால் அவரது உறவினர்கள் வந்துள்ளனர்.

 

தூக்கில் தொங்கிய நிலையில் அவரது கணவர் ஜான்சன் விஷம் அருந்திய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். புகாரின் பேரில் போலீசார் இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.