இரும்பு தடுப்புக் கம்பியில் தலை சிக்கிய நிலையில் தவித்த குழந்தை..!

கும்பகோணம் அருகே வீட்டில் இருந்த இரும்பு தடுப்பு கம்பிக்குள் தலை சிக்கிய நிலையில் தவித்த ஒன்றரை வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. தாராசுரம் அருகே அண்ணாசிலை அருகே வசிக்கும் விஜயானந்த், கிருத்திகா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை மாலையில் விளையாடிக் கொண்டிருந்தது.

 

அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த இரும்பு தடுப்புக்குள் குழந்தையின் தலை தூக்கியது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.