10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் தயாரிக்கும் பணி தொடக்கம்..!
திருநெல்வேலி மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு நடக்க உள்ளதால் அதற்கான பணியில் பள்ளி கல்வித்துறை இறங்கியுள்ளது.
முக்கியமாக பொதுத் தேர்வின் போது பயன்படுத்தப்படும் விடைத்தாள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் புகைப்படம், பெயர் உள்ளிட்ட தகவலுடன் பக்கத்தில் வைத்து தைக்கும் பணி நடந்து வருகிறது. விடைத்தாள் தொடர்பான அனைத்து பணிகளும் முடிந்த பிறகு தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





