செந்தில் ராஜலட்சுமியின் வைரலாகும் போட்டோஷூட்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது வித்தியாசம் காட்டுவார்கள். அப்படி அவர்கள் செய்த ஒரு விஷயம் கானா பாடல் கலைஞர்களை நிகழ்ச்சியில் கொண்டு வருவது தான்.
ஒரு சீசனில் கானா பாடல்களை மட்டுமே பாடி அந்த சீசனையும் வெற்றிக்கண்டவர் செந்தில். இவரது மனைவி ராஜலட்சுமியும் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.
அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் அய்யா சாமி என்ற பாடலை பாடியிருந்தார். தற்போது இவர்கள் இருவரும் காதலர் தின ஸ்பெஷலாக நிறைய போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர். அதைப்பார்த்த ரசிகர்கள் அட செந்தில்-ராஜலட்சுமியா இது ஆளே மாறிவிட்டார்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





