--- --:--:-- --

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்..!

8

புதுச்சேரியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த மனோகர் கடலூர் நோக்கி சென்றுள்ளார்.

 

கிருமாம்பாக்கம் நான்கு மணி சந்திப்புக்கு சென்றபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென்று கரும்புகை கிளம்பியுள்ளது. இதனை பார்த்த மனோகர் உடனடியாக காரை விட்டு கீழே இறங்கினார்.

 

ஒரு சில நிமிடங்களில் கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். மனோகர் உயிர் தப்பிய நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon