12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் போக்சோவில் கைது..!
அரியலூர் மாவட்டத்தில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ரயில் நிலைய மாஸ்டரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக இருப்பவர் பணி முடிந்து வீடு திரும்பும் பொழுது அய்யனார் கோவில் பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 12 வயது சிறுமியிடம் பணம் தருவதாகவும் கலர் கலராக மாஸ்க் தருவதாகவும் ஆசை வார்த்தைகளால் மேலும் தனது செல்போனில் இருந்த ஆபாச புகைப்படங்களை காட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்த நிலையில் பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்தனர்.






