--- --:--:-- --

திருப்பூரில் குட்கா மற்றும் மது விற்ற 3 பேர் கைது: போலீசாரின் அதிரடி சோதனை!

images

திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் இன்று (16.07.2026) தீவிர வாகன தணிக்கை மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் 2 பேர் கைது

வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய தனித்தனி சோதனைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

புதிய பேருந்து நிலையம் அருகே போலீசார் சோதனை மேற்கொண்ட போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த  இசக்கியப்பன் (33)  என்பவரை சோதனையிட்டனர். அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 110 கிராம் குட்கா  பறிமுதல் செய்யப்பட்டது.

 

இதேபோல் M.S. நகர் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில், சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ராஜா (41)  என்பவரிடமிருந்து சுமார் 100 கிராம் குட்கா  பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்ட விரோத மது விற்பனை ஒருவர் கைது

வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் போலீசார் அங்கு நடத்திய தீவிர சோதனையில், சந்தேகப்படும்படியாக நின்றிருந்த முத்துக்குமார் (31) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது உறுதியானது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 180 மி.லி அளவு கொண்ட 5 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon