அமெரிக்காவின் அனைத்து மாகாண அரசுகளும் தடுப்பு ஊசி போடுகிறவர்களுக்கு 100 டாலர் பரிசு வழங்குமாறு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் தடுப்பூசி போடும் நபர்களுக்கு 100 டாலர் பரிசு என்று மாநகர மேயர் அறிவித்திருந்தார்.
இதனை அனைத்து மாகாணங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிபர் ஜோ பிடன் கொரொனாவுக்கு எதிரான யுத்தம் தொடர்வதாக தெரிவித்தார். புதிய சவால்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் அனைத்து அரசு ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் கட்டாயம் முக கவசம் அணியும் படிக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
தமிழ்நாட்டில் 72.09% வாக்குகள் பதிவு - கள்ளக்குறிச்சி முதலிடம்
புதுச்சேரியில் தேர்தல் தொடங்கிய 1 மணி நேரத்தில் 12% வாக்குப்பதிவு..!
விமான நிலையத்தில் வங்கதேச ஜோடி கைது..!
நடுக்கடலில் கப்பலில் தவித்த கர்ப்பிணி பெண்ணை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட அமெரிக்க படை..!
புதுச்சேரியில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து சுயேட்சை வேட்பாளர் தர்ணா..!
102 தொகுதிகள்.. 1625 வேட்பாளர்கள்.. நாளை வாக்குப்பதிவின் முக்கிய தகவல்கள்!