குடிபோதையில் ஒன்றரை மாத பெண் குழந்தையை அடித்து கொலை செய்த தந்தை..!
ஆந்திரா அருகே குடிபோதையில் 15 மாத பெண் குழந்தையை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய தந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நெல்லூர் மாவட்டம் பார்த்த கணுப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மது என்பவருக்கு குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளது. பெயருக்கு ஏற்றபடி குடிக்கு அடிமையான இவர் போதையில் மனைவி மற்றும் 15 மாத பெண் குழந்தையை அடித்து உள்ளார்.
இதில் மனைவி காயமுற்ற நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தை இறந்தது தெரிய வரவே வீட்டிலிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.






