--- --:--:-- --

130 அடி போர்வெல் குழியில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு..!

3

த்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தரியா என்ற கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் சிவா அருகில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

 

திங்கள்கிழமை காலை 7 மணி அளவில் சிறுவன் சிவா 130 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் சிறிது நேரம் கழித்து அவனது பெற்றோர்கள் குழந்தையை காணவில்லை என தேடத் துவங்கிவிட்டனர்.

 

எங்கு தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில் வீட்டின் வாசல் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் உள்ளே எட்டிப் பார்க்கும் போது குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு உள்ளது. இதை அறிந்த பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

இதையடுத்து உடனடியாக ஆக்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட 30 பேர் கொண்ட மீட்புக்குழு உடன் அந்த கிராமத்திற்கு விரைந்தார்.

 

காவல்துறையினர் அந்த ஆழ்துளை கிணற்றுக்குள் மக்கள் நெரிசலால் மண்சரிவு ஏற்பட்டு விடாமல் இருக்க வேண்டுமென்பதற்காக சுற்றி தடுப்புகளை அமைத்தனர். 130 அடியில் விழுந்த சிறுவனை உயிருடன் தூக்கியவர்களுக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon