பொது நிவாரண நிதிக்கு நடிகர் விஜய்சேதுபதி 25 லட்சம் ரூபாய் நிதியுதவி..!

கொரொனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் நடிகர் விஜய்சேதுபதி 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

 

கொரொனா தொற்றை எதிர்கொள்ள தாராளமாக நிதி வழங்க வேண்டுமென முதலமைச்சர் மு க ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்று தனிநபர் தொழில் நிறுவனங்கள் மற்றும் திரைத்துறையினர் என ஏராளமானவர்கள் நிதி உதவி அளித்துள்ளனர்.

 

அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதியும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சரை சந்தித்த விஜய் சேதுபதி நிவாரண நிதியை வழங்கியுள்ளார்.


Leave a Reply