--- --:--:-- --

கொரொனா பரவல் காரணமாக முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்..!

3

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜட் கூட்டத் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில் இரு வாரங்களுக்கு முன்பே முடித்துக் கொள்ளப்பட்டது.

 

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கொரொனா பரவலை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது. மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

அவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக தெரிவித்த தற்காலிக சபாநாயகர் ஓம் பிர்லா தற்போது சீரான உடல் நலத்துடன் இருப்பதாக குறிப்பிட்டார். முதலில் மக்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பின்னர் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon