--- --:--:-- --

மகளை கண்டுபிடித்து தரவில்லை எனக்கூறி காவல் நிலையம் முன்பு தந்தை தீக்குளித்து பலி..!

7

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூரில் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தரவில்லை எனக் கூறி காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

தாம்பரம் அடுத்த காமராஜ புரத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸன் என்பவர் தனது 13 வயது மகளை காணவில்லை என கடந்த 3ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பிறகு புகார் குறித்து விசாரிக்க காவல் நிலையம் சென்ற போது போலீசார் ஆபாசமாக திட்டியதாக குற்றம்சாட்டி நேற்று மதியம் காவல் சேலையூர் காவல் நிலையம் முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

 

80 சதவீத தீக்காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சீனிவாசன் புகாரளித்த அன்றே சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon