ஈரான் தளபதி சுலைமான் இருக்கும் இடம் குறித்து உளவு சொன்னவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
ராணுவ தளபதி சுலைமானி குறித்து அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு தகவல் கொடுத்ததாக மக்முத் மசாவி மஜீத் என்பவரை ஈரான் கடந்த மாத இறுதியில் கைது செய்திருந்தது. சிஏஏ மொசாத் உளவு அமைப்புகளில் பணியாற்றிய இவர் சுலைமானியின் வாகன பயணம் குறித்த தகவல்களை அமெரிக்காவிற்கு தந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக நீதிமன்ற விசாரணையின்போது அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு நேற்று நிறைவேற்றப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.