கொரோனா வைரசின் தாக்கம் பச்சை மண டலத்தில் இருந்து வந்த கோவை மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.கோவையில் தற்போது வரை 102 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில் சோமனூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் அவசரக்கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் பாதுகாப்பு நடவடிக்கையாக சோமனூர்,கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கடைகள்,உணவகங்கள்,பேக்கரிகள்,சலூன்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் வரும் ஜூன் 23 முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்கும் வகையில் வியாபாரிகளின் இம்முடிவு வரவேற்பை பெற்றுள்ளது.