சைக்கிளில் உடல்நலம் பாதித்த தந்தையை ஏறி அமர வைத்தபடி 1200 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டி சென்ற 15 வயது சிறுமிக்கு இந்திய சைக்கிள் போட்டி கூட்டமைப்பு பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது. ஹரியானாவின் குரு கிராமிலிருந்து சொந்த மாநிலமான பிகாருக்கு சைக்கிளில் உடல்நலம் பாதித்த தந்தையை பின் இருக்கையில் அமரவைத்து சிறுமி ஜோதிகுமாரி எட்டு நாட்களுக்கும் மேலாக ஓட்டிச் சென்றார்.
இதை கண்ட இந்திய சைக்கிள் போட்டி கூட்டமைப்பு தலைவர் சோதனையில் சிறுமி தேர்ச்சி பெற்றால் டெல்லியில் உள்ள தேசிய சைக்கிள் போட்டி அகாடமியில் தேர்வு செய்யப்படுவார் என கூறினார். சிறுமியை தொடர்பு கொண்டு அவரை டெல்லிக்கு அடுத்த மாதம் வரும்படி கூறி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
நுரையீரலில் 8 cm கத்தி : ஷாக்கிங் ஆப்ரேஷன்
இனி பான், ஆதாரில் ஒரே நேரத்தில் பெயர் மாற்றலாம்!
சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்களை சுற்றிவளைத்த 7,000 பாதுகாப்பு வீரர்கள்..!
பாஜக பிரமுகர் உமா சங்கர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை..!
6 தீவிரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு
பாகிஸ்தானியர்களை வெளியேற்ற இன்று வரை கெடு