கொரொனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலத்திலும் ஆன்லைன் மூலம் அத்தியாவசிய மற்றும் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நோய் பரவலைத் தடுக்க நான்காம் கட்டமாக மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க பட்டிருக்கும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் மாநில அரசு அனுமதிக்கும் பட்சத்தில் அவர்களை தவிர மற்ற இடங்களில் சலூன்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரொனா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை மற்றும் ஆரஞ்சு நிற மண்டலங்களில் மட்டும் ஆன்லைன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் சிவப்பு மண்டலங்களில் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தவிர மற்ற இடங்களிலும் இந்த சேவையை தொடங்க ஆன்லைன் நிறுவனங்களுக்குஅனுமதி வழங்கப்பட்டுள்ளது.