மே 18 முதல் அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 6 நாட்கள் இயங்கும்!

கொரொனா ஊரடங்கு காரணமாக அதிகபட்சம் 33 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க கடந்த மூன்றாம் தேதி அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்கும் மே 18ஆம் தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் சனிக்கிழமை உட்பட வாரம் ஆறு நாட்கள் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

ஊழியர்களை இரு குழுக்களாகப் பிரித்து இரண்டு, இரண்டு நாட்களாக சுழற்சி முறையில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

 

அதேசமயம் அலுவலகத்திற்கு வராத ஊழியர்களை எப்போது அழைத்தாலும் பணிக்கு வர தயாராக இருக்க வேண்டும் என்றும் அலுவல்களை மேற்கொள்ள எப்போதும் மின்னணு தகவல் தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அனைத்து குருப் ஏ அலுவலர்கள் அலுவலக தலைமை பொறுப்புகளில் இருப்பவர்கள் வாரம் ஆறு நாட்களும் பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அலுவலகம் வரும் ஊழியர்களுக்கு தேவையான பேருந்து போக்குவரத்து வசதிகள் செய்யப்படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply