ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தடுமாறி விழப்போன பயணியை பத்திரமாக மீட்ட காவலர்
சென்னை எழும்பூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தடுமாறி விழப் போன பயணியை பத்திரமாக மீட்ட காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மும்பை தாதர் விரைவு ரயில் புறப்பட்டு செல்லும் போது பயணி ஒருவர் ஓடிச்சென்று ரயிலில் ஏற முயன்றார். அவர் கால் தடுமாறி கீழே விழ சென்றபோது பணியில் இருந்த தலைமை காவலர் உடனடியாக சுதாரித்து காப்பாற்றி பத்திரமாக மீட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




