மேற்கு வங்க மாநிலத்தில் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு பெற்ற முதியவர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையம் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கிழக்குப் புத்துவான் மாவட்டத்தில் கல்னா பகுதியை சேர்ந்த 70 வயதான இந்திர நாராயணன் என்பவர் நாகாலாந்து மாநிலம் லாட்டரி சீட்டுகளை வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.
60 ரூபாய்க்கு லாட்டரி சீட்டுகள் வாங்கியவருக்கு ஒரு கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்தது. லாட்டரி விற்ற கடைக்காரர் வந்து ஆதாரத்துடன் தெரிவித்த பின்னர் தான் அவர் அதனை நம்பினார். இந்த நிலையில் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகிவிட்டதால் வீட்டை விட்டு வெளியே வரவே தனக்கு பயமாக இருக்கிறது என்று கூறி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளார்.
லாட்டரியில் தனக்கு கிடைத்துள்ள பணத்தின் ஒரு பகுதியை துர்கா கோவில் கட்டுவதற்கும்,பூஜைக்கும் செலவிட இருப்பதாக அவர் தெரிவித்தார்.