ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ராணுவ மருத்துவர்கள்
வட மாநிலத்தில் ஓடும் ரயிலில் ராணுவ மருத்துவர்கள் இருவர் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தது நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
அவரது குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்த நிலையில் அதே ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த ராணுவ மருத்துவர்களான கேப்டன் லலிதா மற்றும் கேப்டன் அமந்தீப் ஆகியோருக்கு இது குறித்து தகவல் கிடைத்தது. விரைந்து வந்த இருவரும் வலியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




