நாட்டிலேயே பொது நிர்வாகத்தில் தமிழக அரசு முதலிடம் பிடித்து இருப்பதன் மூலமாக மாநிலத்தில் நல்லாட்சி நடைபெறுவது உறுதியாக இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி வழங்குவதில் தமிழகத்திற்கு மத்திய அரசு முதலிடம் வழங்கியுள்ளதை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் இந்த ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவையோடு 2019ஆம் ஆண்டு நம்மிடமிருந்து விடை பெறுகிறது என்று டிடிவிதினகரன் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக அதிமுக ஆட்சிக்கு கிடைத்த பெருமையை நகைச்சுவையாக விமர்சிக்கும் டிடிவிதினகரன் போன்றவர்கள்தான் உண்மையில் கோமாளிகள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
த.வெ.க ஆதரவு வாபஸ் - ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிரடி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை
சிலிண்டர் விலை மேலும் ரூ.200 வரை உயர வாய்ப்பு..!






