குடியுரிமையை பறிக்கும் வகையிலான சட்ட உட்பிரிவை சுட்டிக்காட்ட ராகுல் தயாரா?

குடியுரிமை சட்டத் திருத்தத்தில் மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையிலான ஒரு சட்ட உட்பிரிவை சுட்டிக்காட்ட ராகுல் காந்தியால் முடியுமா என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.

 

ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமித்ஷா காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் குடியுரிமை சட்டத் திருத்தம், சிறுபான்மையினர் இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறித்துவிடும் என்று மக்களிடம் வதந்தியை பரப்புகிறார்கள் என குற்றம்சாட்டினார்.

அப்படி மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையிலான ஒரு சட்ட உட்பிரிவை சுட்டிக்காட்ட தயாரா என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.


Leave a Reply