சென்னை புழலில் குடும்ப பிரச்சனையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். திருவள்ளுவர் தெருவில் வசித்து வருபவர் வெற்றிவீரன்.
இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து ஆறு ஆண்டுகளாக தாயார் வீட்டில் இருந்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு மனைவியிடம் சமரசம் பேசிய வெற்றிவீரன் தனது வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இரவு முழுவதும் கடும் வாக்குவாதம் நீடித்த நிலையில் அதிகாலையில் சமையல் கத்தியால் மனைவியை குத்திக் கொலை செய்த வெற்றிவீரன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
மேலும் செய்திகள் :
சாக்கடை கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு..!
தவெகவினருக்கு தலைமை உத்தரவு..!
சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்.. அமித் ஷா கண்டனம்
திருமணத்திற்கு பின் தனது கணவருடன் நெருக்கமாக போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை பாவ்னி
புதுச்சேரி அ.தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்..!