ராகவா லாரன்ஸ் கூறுவது எந்த நாட்டிற்கு என தெரியவில்லை என்றும் தாம் நாட்டிற்காக பேசி வருவதாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா போன்ற பெரிய நாட்டில் வெங்காயத்தை உற்பத்தி செய்ய முடியாதது அவமானமாக உள்ளதாக கூறினார். வெங்காயம் மற்றும் வெள்ளைபூண்டு உண்பதே இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார்.
சீமான் பேசுவது நாட்டிற்கு நல்லதல்ல என ராகவா லாரன்ஸ் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ராகவா லாரன்ஸ் கூறுவது எந்த நாட்டிற்கு என்று தெரியவில்லை என்றும் கூறினார்.
மேலும் செய்திகள் :
சாக்கடை கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு..!
தவெகவினருக்கு தலைமை உத்தரவு..!
சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்.. அமித் ஷா கண்டனம்
திருமணத்திற்கு பின் தனது கணவருடன் நெருக்கமாக போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை பாவ்னி
திருமண நாளில் விஷ்ணு விஷாலுக்கு பிறந்த குழந்தை..!
புதுச்சேரி அ.தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!