தொடர் மழையால் ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .தொடர்ச்சியாக தென் தமிழக பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

 

நேற்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் இன்று கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

இரண்டு நாட்கள் கனமழை நீடிக்கும் என்ற ஒரு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகத்தில் மழையானது குறைந்தாலும் கூட தென் தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply