இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சரை நியூசிலாந்து ரசிகர் ஒருவர் திட்டியதற்கு அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் மன்னிப்புக் கோரியுள்ளார்.
ஆக்லாந்தில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து வீரர் ஆர்ச்சரை ரசிகர் ஒருவர் நிறவெறியுடன் வசைபாடியதாக அவர் டிவிட்டரில் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் புயலை கிளப்பியது. இதற்கு நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் மன்னிப்பு கோரியுள்ளார். நியூசிலாந்து பல கலாச்சாரம் கொண்ட நாடு எனவும் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் இனி நிகழாது என தாம் நம்புவதாகவும் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
10 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்!
காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்
அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேறுவதை உறுதி செய்க - அமித்ஷா
மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு - ராகுல் காந்தி
பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய வீரர்..!