நவ.27 இல் பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட் விண்ணில் ஏவப்படும்

14 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 47 ராக்கெட் வரும் 25ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

 

இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் வரும் 27ஆம் தேதி காலை 9.28 மணிக்கு 14 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-27 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் ஏவப்படும் 13 நானோ செயற்கைகோள்கள் அமெரிக்காவிற்கு சொந்தமானவை.

 

இந்தியாவின் இந்த செயற்கைக் கோள்கள் மேம்படுத்தப்பட்ட வகையை சேர்ந்ததாகும். துல்லியமாக படங்களை அனுப்பும் திறன் கொண்ட இந்த செயற்கைக்கோள் புவி சுற்றுவட்டப் பாதையில் 507 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ ஏவும் 74 ஆவது ராக்கெட் இதுவாகும்.


Leave a Reply