தனிநபர் ரகசியம் என்பதே கிடையாதா? – உச்சநீதிமன்றம் அதிருப்தி

நாட்டில் தனிநபர் ரகசியம் என்பதே கிடையாதா என உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மூத்த காவல் அதிகாரியான முகேஷ் குப்தா என்பவர் ஊழல் வழக்கு ஒன்றில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

தனது அலைபேசியை மாநில அரசு ஓட்டு கேட்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் முகேஷ் குப்தா மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நாட்டில் என்னதான் நடக்கிறது, தனிநபர் ரகசியம் என்பதே இல்லாத சூழல் உருவாகிவிட்டது என வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

 

எதனடிப்படையில் தனிநபரின் அலைபேசியை ஒட்டு கேட்க அனுமதி அளித்தார்கள் என வினவிய நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சத்தீஸ்கர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply