காஷ்மீரில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் சுமார் 273 தீவிரவாதிகள் ஊடுருவல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் சுமார் 273 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் விரக்தி அடைந்த பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்கும் வன்முறையை கட்டவிழ்த்து விட தீவிரமாக முயன்று வருகிறது.

 

இந்நிலையில் இதே நோக்கத்துடன் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் சுமார் 273 தீவிரவாதிகள் நடமாடி வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 166 பேர்கள் உள்ளூர்க்காரர்கள் எனவும் 107 பேர் வெளிநாட்டினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 112 பேர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சார்ந்தவர்கள் என்றும் நூறுபேர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் 59 தீவிரவாதிகளும் அல் கொய்தா அமைப்பின் 3 தீவிரவாதிகளும் அடங்கும் என அமைக்கப்பட்டுள்ளது.

 

இவர்கள் அனைவரும் காஷ்மீர் பகுதியில் மிகப்பெரிய அளவில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை தகவல்கள் தெரிவித்து உள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டி சுமார் 37 தளங்களை பாகிஸ்தான் அமைத்து இருப்பதாகவும் அங்கிருந்து தீவிரவாதிகள் மூலம் காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கடந்த 11ஆம் தேதி என்னை செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply