அக்டோபர் 2 க்குள் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை பொதுமக்கள் கைவிட வேண்டும் : பிரதமர் மோடி

வரும் அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் வீடு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய நெகிழிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாடுமுழுவதும் கால்நடைகளை நோய்களிலிருந்து பாதுகாப்பது உள்ளிட்ட 16 வகையான திட்டத்தை உத்திரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

 

மதுராவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கிருந்த பசுக்களை பார்வையிட்டார். கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயை தடுக்கும் இந்த திட்டத்தை 12,652 கோடி ரூபாய் செலவில் தொடங்கி வைத்தவர் அடுத்த 5 ஆண்டுகளில் 100% இலக்கை எட்ட நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களை சேகரித்து அவற்றை பிரித்தெடுக்கும் பெண்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். எவ்வாறு பொருட்களை பிரிகிறார்கள் என்பதை கேட்டறிந்த அவர் சில நெகிழிப் பொருட்களை பிரித்துக் கொடுத்தார். நெகிழி தயாரிக்கும் இயந்திரத்தில் செயல்பாட்டையும் பிரதமர் பார்வையிட்டார்.

 

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கால்நடைக்கான செயற்கை கருவூட்டல் மையத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி வரும் அக்டோபர் இரண்டாம் தேதிக்குள் வீடு அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதற்காக சுய உதவி குழு சமூக அமைப்பு மற்றும் தன்னார்வலர்கள் திட்டத்தில் இணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார் .இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதலமைச்சர், நடிகையும் பங்கேற்றனர்.


Leave a Reply