ஜம்முவில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டது

ஜம்முவில் 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளதை அடுத்து பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது சட்டப்பிரிவின் சரத்துகளை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

 

அதேபோல், காஷ்மீரை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் மசோதா நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார்.இந்த அதிரடியாக நடவடிக்கைகளுக்காக ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதுகாப்பு படையினரை மத்திய அரசு குவித்தது.144 உத்தரவு பல இடங்களில் அமல்படுத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

 

இந்நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜம்முவில் 144 உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டதை அடுத்து பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் இன்று பள்ளிக்கு கிளம்பி சென்றனர்.


Leave a Reply