கரூரில், காவிரி குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக கூறி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் நகராட்சி 27 வது வார்டிற்கு உட்பட்ட பகுதிகளில் வழங்கப்படும் குடிநீரானது சாக்கடை நீர் கலந்து துர்நாற்றத்துடன் வருவதாக கூறினர்.
இதனை கண்டித்து லட்சுமி ராம் திரையரங்கம் அருகே பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் அங்கு வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்த நிலையில் மறியல் கைவிடப்பட்டது.
மேலும் செய்திகள் :
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்தா - குறைந்ததா?
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..!
தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் மேலிடம் இன்று முக்கிய ஆலோசனை..!
மாளவிகா மோகனன் சேலையில் அழகிய போட்டோஷூட்..!
தமிழ்நாட்டிற்கு வரும் மோடி இட்லி, தோசைதான் பிடிக்கும் என்பார் - கார்த்தி சிதம்பரம்






