12 அடி நீளமுள்ள ராஜநாகம் பிடிபட்டது..!
ஒடிசாவில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த 12 அடி நீள ராஜ நாகம் பிடிபட்டது. மாவட்டத்திலுள்ள புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் இருந்த 12 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று அங்கிருந்த பாழும் கிணற்றில் கிடந்துள்ளது.
இதையடுத்து அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு இந்திய வன உயிரின அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து குறிப்பிட்ட பகுதிக்கு வந்த வனத்துறையினர் ராஜநாகத்தை லாவகமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.






