மகளிர் உரிமைத் தொகை: தகுதிகளை தளர்த்த கோரிக்கை
மகளிர் உரிமைத் தொகை திட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாகப் பேரவையில் பேசிய எம்.எல்.ஏ ஜெயக்குமார், மகளிர் உரிமைத் தொகை பெறு வதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிகள் கடுமையாக உள்ளதால் ஏராளமான பெண்கள் இதனைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கெடுபிடிகளைத் தளர்த்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.





