திடீரென இடிந்து விழுந்த தண்ணீர் தொட்டி..3 பேர் பலி..!
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் பூசாரி பகுதியில் தொழிலாளர் முகாம் அமைந்துள்ளது. இங்குள்ள தற்காலிக தண்ணீர் தொட்டி எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது.
இதில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் 7 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் அழுத்தத்தின் காரணமாக தொட்டியின் சுவர் வெடித்து இழந்து விழுந்திருக்க கூடும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





