தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் நாளை தொடக்கம்..!
தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பெருந்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பதிவு செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை திருப்பூரில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்.
ஆட்டோ ஓட்டுநர், ஆலைத் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், 18 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.




