மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி..!
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா காரணமாக வீட்டு தனிமையில் இருக்கிறேன் எனவும் தொடர்பில் உள்ளவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.






