மனைவி இல்லாத துக்கத்தால் கணவரும் உயிரிழந்த சோகம்..!
சேலத்தில் உடல்நல குறைவால் மனைவி உயிரிழந்தது சோகத்தை தாங்க முடியாமல் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட மீனவர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராம் பிரகாஷ் – வெண்ணிலா தம்பதி. இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ள நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வெண்ணிலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் பிரகாஷ் திருச்சி ரயில் நிலையம் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





