வேலூர் மயான கொள்ளை விழாவில் விபரீதம்..!
வேலூர் மயான கொள்ளை விழாவின் 60 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர் சரிந்து விழுந்தது. பொதுமக்கள் யாரும் அருகில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வேலூர் கானகாச்சங்கரையில் மயான கொள்ளை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் விருகம்பட்டு, மோட்டூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட 3 தேர் அமைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது 60 அடி தேர் எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்தது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.






