தமிழகத்தில் நாளை பள்ளிகள் வழக்கம்போல செயல்படும்
தமிழகத்தில் நாளை வழக்கம்போல பள்ளிகள் செயல்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இரண்டு நாட்கள் நீடித்ததால் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இதனால் பாடத்திட்டங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் முடிப்பதற்காகவும், மாணவர்களின் நலன் கருதியும் நாளை தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






